Posts

Showing posts with the label Short Story

அண்ணே, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !

ஆறுமுகம் புதிதாக எங்கள் வீட்டில் ( ரூமில்) சேர்ந்திருந்தான்.  நான், தனா , கேங்கோ மூன்று பேரும்  இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஹாஸ்டல் இன்னும் கிடைக்கவில்லை. ஆறுமுகம் முதல் வருடம் சேர்ந்திருந்தான்.  கேங்கோவின் மாமாதான் ஆறுமுகத்தை ரூமில் சேர்க்க பரிந்துரைத்திருந்தார் . ஆனால் எங்கள் யாருக்கும் விருப்பமில்லை.எப்படியும் அவன் வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தனியே போய் விடுவான் என்று நாங்கள் நினைக்க, அவனோ  அண்ணன் அண்ணன் என்று எங்கள் மேல் பாசமாக இருந்தான். அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. மேற்கத்திய பாணி கழிப்பறையை முதல் முதலாகப் பார்க்கிறான். (நாங்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களில் பார்த்திருந்தோம்!) "அண்ணே இதில எப்படி ஏறி உக்கார்றது?" கேங்கோ அவனுக்கு ஒரு டெமோ செய்து காட்ட வேண்டியிருந்தது. சிரிக்காமல்  கிண்டல் செய்வதில் தனாவை மிஞ்ச ஆள் இல்லை.அவன் இப்போது, அவனுடைய form -க்கு வந்து விட்டிருந்தான். "அண்ணே இது என்ன Fair & Lovely ? - ன்னு போட்டிருக்கு " " அதுவா அது தலை முடிக்குப் போடறது ?" "அப்படியான்னே?" ...

சொர்க்கத்தில் சேராது...!

முதலில் சலீம்தான் என்னைப் பார்த்தான். நான் பெங்களூர் போய்விட்டு சென்னை  திரும்பி வரும்போது சாப்பிடுவதற்காகப் பேருந்தை நிறுத்தியிருந்தார்கள். அவன் வேறொரு பேருந்தில் பெங்களூர் போகிறான். சலீம் எனக்கு 2 வருடம் கல்லூரி இளையன். கொஞ்சம் உருளைக்கிழங்கு போல இருந்தாலும் smart ஆக இருப்பான். முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும். அவனுக்கும், அவனுடைய வகுப்புத் தோழி சுகுணாவுக்கும் காதல். கல்லூரி நாட்களில்,   அட்மின் பிளாக்-ஐச் சுற்றி வந்தால் எப்படியும் ஒரு முறை இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்து விடலாம். விடுமுறையாக இருந்தால்,இரண்டு பேரும், ஜங்சன் போவதற்கு, திருக்குறுங்குடியிலிருந்து  வரும் பத்தரை மணி  கணபதி பஸ்சைப் பிடித்துவிடுவார்கள். சுகுணாவும் அழகுதான். எனக்குத் தெரிந்து, சலீமைத் தவிர 13 பேர் அவளைக் காதலித்தார்கள்.... ஒருதலையாக, அவளுக்கும் கூடத்  தெரியாமல்! "எப்படி இருக்கீங்க " என் பெயர் அவனுக்கு ஞாபகம் இல்லை என்பது தெரிந்தது.. " நான் நல்லா இருக்கேன் சலீம் .பெங்களூர் site inspection, முடிச்சுட்டு சென்னை போய்க்கிட்டு இருக்கேன், நீ எப்படி இருக்க" "நல...

தத்தனேரி மயானம்

பள்ளி கல்லூரி நாட்களிலும், மதுரை வைகை ஆயில்ஸ் -இல் வேலை பார்த்தபோதும், பொதுவாக எங்கள் உறவினர் வீடுகளில் துக்கம் என்றால் நானோ என் அம்மாவோதான் போவோம். பெரும்பாலும் நேரம் இருந்தால் நான் தத்தனேரி மயானம் வரை போவது வழக்கம். படிச்ச பையனாச்சே....நான்தான் போய், மயானத்தில் இருக்கும் அந்த மாநகராட்சி அலுவலரிடம் சீட்டு வாங்கி வருவேன் "மாரியம்மாள், வயது 75, மரணத்திற்கான காரணம் முதுமை " - இது போல... சுடுகாட்டில், எங்கள் உறவினர்களுக்கு, அர்ஜுனன்தான் வெட்டியான். அர்ஜுனனும் எங்கள் தூரத்து உறவினர் வேந்தன் சித்தப்பாவும் திருவாப்புடையார் கோவில் ஸ்கூலில் classmates. வேந்தன் சித்தப்பாவின் அப்பா, அதாவது எங்கள் தாத்தா ஒரு சுதந்திர போராட்டத் தியாகி. 1990-களில் அவருக்கு வயது 95-க்கு மேல் இருக்கும். படுத்த படுக்கையாக இருந்தார். சந்திக்கும்போதெல்லாம் அர்ஜுனன் அடிக்கடி சித்தப்பாவிடம் சொல்வது, "வேந்தா , உங்க அப்பா செத்தார்னா, என்கிட்டத்தான் வரணும், நான் பஷ்பமா எரிச்சுக் குடுத்திடறேன்." அப்போதெல்லாம் மின் மயானம் வந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு சராசரியாக அர்ஜுனனுக்கு 3-க்கும் மேற்பட்ட ...