Posts

Showing posts with the label Nako

பயணங்கள் தொடர்கின்றன - 6 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 3 - நாக்கோ (Nako) முதல் காசா (Kaza) வரை

Image
நான்காம் நாள் காலை வேனில் கிளம்பும் முன் எங்களை நாக்கோ கிராமத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வரச்சொல்லி விட்டார்கள். அதனால் அதிகாலை 6 மணிக்கே கிளம்பி ஒரு ட்ரெக்கிங், மலை மீது 40 நிமிடம் ஏறினால் ஒரு சிறிய கோவில். அங்கிருந்து பார்க்கும்போது தெரியும் நாக்கோ கிராமம் வேறொரு வகையில் அழகு!  நாக்கோவின் புத்த மடாலயம், நாங்கள் செல்லும்போது திறக்கவில்லை. 7 மணிக்கே souvenir கடை ஒன்றைத் திறந்து வைத்து ஒரு பாட்டியம்மாள் எல்லோரையும் அழைத்துக்கொண்டிருந்தது. மூன்று ஜோடி தொங்கட்டான்களை மொத்தம் 750 ரூபாய் கொடுத்து வாங்கினேன். (வீட்டில் கேட்டால் ஜோடி 60 ரூபாய்க்கு இங்கேயே கிடைக்கும் என்றார்கள்). ஆனால் இவ்வளவு உயரத்தில், ஆண்டில் 5 மாதம் மட்டும்  சுற்றுலாவை நம்பி இருக்கும் கள்ளமற்ற மனிதர்கள் வாழும் இந்த ஊரில் விலை ஒன்றும் அதிகம் இல்லை என்றுதான் சொல்வேன். இன்றைய திட்டம், நாக்கோவில் இருந்து க்யூ (Gue) , அங்கிருந்து தாபோ (Tabo ), தங்கர் (Dhankar) வழியாக காசா (Kaza) சென்றடைய வேண்டும். இங்கு ஒன்று சொல்லவேண்டும்.... பல தார திருமணத் தடை சட்டம்   அண்ணல் அம்பேத்காரால் 1951-இல் பரிந்து...

பயணங்கள் தொடர்கின்றன - 5 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 2 - சிட்குள் முதல் நாக்கோ வரை

Image
  மூன்றாம் நாள் காலை 5 மணிக்கே எழுந்து விட்டோம் டார்ஜிலிங் போனால் Tiger Hills சூரிய உதயம் என்று ஒன்றைத் தனியாக கூட்டிப்போய் காண்பிப்பார்கள். சிட்குளில் நாங்கள் தங்குமிடத்தில் இருந்து பார்த்தால்  சற்றே சிறிய அளவில் அது சாதாரணமாகக் காணக் கிடைக்கிறது!  மலையில் காலை 4 மணிக்கெல்லாம் வெளிச்சம் வந்து விடுகிறது. வெளியில் 9 டிகிரி குளிர், பாஸ்பா நதியைச் சென்று பார்த்தோம். தண்ணீர் இரு கரை புரண்டெல்லாம் போகவில்லை என்றாலும் வேகமாக ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்குப் போவதுதான் காரணம். காலை உணவுக்கு முன் சிட்குள் கிராமத்தின் உள்ளே சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பார்த்தால் கடலோரம் இருக்கும் எல்லா கிராமும் கூட கடைசி கிராமந்தானே!  ஆனால், இந்த கிராமத்திற்கு அப்பால் வேறு சாலைகள் இல்லை. ஒரு பக்கம் ஆறு, ஒரு பக்கம் மலை, அடுத்த புறம் திபெத் -சீன எல்லை என்பதால்  இந்த ஊருக்கு வந்துவிட்டு வேறு ஊருக்குப் போக வேண்டும் என்றால் வந்த சாலையிலேதான் திரும்ப வரவேண்டும். அதனால் கடைசி கிராமம் என்று சொல்லிவி...