Posts

பயணங்கள் தொடர்கின்றன - 5 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 2 - சிட்குள் முதல் நாக்கோ வரை

Image
  மூன்றாம் நாள் காலை 5 மணிக்கே எழுந்து விட்டோம் டார்ஜிலிங் போனால் Tiger Hills சூரிய உதயம் என்று ஒன்றைத் தனியாக கூட்டிப்போய் காண்பிப்பார்கள். சிட்குளில் நாங்கள் தங்குமிடத்தில் இருந்து பார்த்தால்  சற்றே சிறிய அளவில் அது சாதாரணமாகக் காணக் கிடைக்கிறது!  மலையில் காலை 4 மணிக்கெல்லாம் வெளிச்சம் வந்து விடுகிறது. வெளியில் 9 டிகிரி குளிர், பாஸ்பா நதியைச் சென்று பார்த்தோம். தண்ணீர் இரு கரை புரண்டெல்லாம் போகவில்லை என்றாலும் வேகமாக ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்குப் போவதுதான் காரணம். காலை உணவுக்கு முன் சிட்குள் கிராமத்தின் உள்ளே சென்றோம். இது இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பார்த்தால் கடலோரம் இருக்கும் எல்லா கிராமும் கூட கடைசி கிராமந்தானே!  ஆனால், இந்த கிராமத்திற்கு அப்பால் வேறு சாலைகள் இல்லை. ஒரு பக்கம் ஆறு, ஒரு பக்கம் மலை, அடுத்த புறம் திபெத் -சீன எல்லை என்பதால்  இந்த ஊருக்கு வந்துவிட்டு வேறு ஊருக்குப் போக வேண்டும் என்றால் வந்த சாலையிலேதான் திரும்ப வரவேண்டும். அதனால் கடைசி கிராமம் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். அதனால் சுற்றுலாவ

பயணங்கள் தொடர்கின்றன - 4 : ஸ்பிட்டி வேலி (Spiti Valley) 1 - ஜிபி முதல் சிட்குள் வரை

Image
         என் நண்பர் ஒருவர் டிவிஎஸ் XL வைத்திருந்தவர், அடுத்து ஒரு ராயல் என்பீல்ட் - புல்லட் வாங்கினார். வாங்கி சில வாரங்களுக்குள்ளேயே , டெல்லியிலிருந்து லே- லடாக் வரை தன்னுடைய புல்லட்டில் ஒரு சாகசப் பயணம் போனார். அது அவருக்கு மிகக் கொடுமையான அனுபவமாக  அமைந்துவிட்டது. மொத்த பயணமும் அவருக்கு பயமாகவே  இருந்திருக்கிறது . திரும்பி வரும்போது வண்டியை பார்சல் சர்வீஸில் ஒப்படைத்து விட்டு விமானத்தில் வந்து விட்டார். அது  எனக்கு ஒரு எதிர் மறை எண்ணத்தைத் தானே உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் அந்த இமயமலைப் பகுதியின் மீது ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணியது ( கவனிக்க ...புல்லட் பயணத்தில் அல்ல!) இது ஒரு புறம் இருக்க, கொரோனா நாட்களில் யூ -டியூபில் , சில Travel Vlog - பார்க்கும்போது தான்யா (Tanya Khanijow) என்ற யூ -டுயூபரின்   ஸ்பிட்டி வேலி  பயண வீடியோக்கள் கிடைத்தன. அது இமயமலையின் வேறொரு பக்கத்தைக் காட்டியது. அது அதன் தனித்துவம் வாய்ந்த புவியமைப்பு. ஸ்பிட்டி வேலி என்பது குல்லு -மணாலி போல அல்லது ஊட்டி ,டார்ஜிலிங் போல ஒரு கோடை வாசஸ்தலம் அல்ல. இது மலையில் அமைந்திருக்கும் ஒரு குளிர் பாலைவனம். பலவாறாக யோசித்து, பி

வினாவெழுத்துக்கள் क्या हैं ?

உத்தரகாண்டில் ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பள்ளி. அதில் ஓர் ஆசிரியர். அவர் கையில் ஒரு தமிழ் நூலை வைத்துக்கொண்டு தமிழ் செய்யுளாக தேவாரத்தையும் இலக்கணத்தில் வினாவெழுத்துக்கள்  "எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகும்மே "  என்றும்நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அந்தக் குழந்தைகளின் நிலையை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?  அது ஒருபுறம் இருக்கட்டும்.  ஒரு முறை நான் ஊட்டி சென்றபோது ஒரு திரையரங்கில் படக மொழிப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அன்றுவரை அந்த மொழியில் திரைப்படம் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது! அப்படிப்பட்ட ஊரில் ஒரு மலை கிராமம். அங்கு ஒரு தொடக்கப்பள்ளி. அதில் படிக்கும் மாணவர்கள் படுக மொழியை தாய்மொழியாகவும் தமிழை வீட்டுக்கு வெளியில் பேசும் மொழியாகவும் ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்தியையும் கற்க வேண்டுமென்றால் அக்குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்!  தமிழ் நாட்டில் கணிசமான பேருக்கு இந்தி மூன்றாம் மொழியல்ல; நான்காம் அல்லது ஐந்தாம் மொழி. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என்

ஏப்பே, இந்த ஊருக்கு எந்த பஸ்ஸுப்பே போகும்?

Image
  2015 இல் பின்லாந்து விசாவுக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது..விசா நேர்காணல் திங்கட்கிழமை காலை என்பதால் நான் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் எடுத்து டெல்லி போய்விட்டேன். அங்கிருந்து பிவாடி -யில் இருக்கும் என் கல்லூரி நண்பனைப் பார்க்கப் போகலாம் என்று ஒரு எண்ணம். பிவாடி டெல்லியில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. அளவில் நம் ஊர் கோவில்பட்டியை விட சற்றே பெரியஊரான இது ராஜஸ்தானின் ஒரு முக்கியத் தொழில்மையமாகும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கி பிவாடி போக வேண்டும் என்றால், ஒரே வழி டாக்ஸிதான் என்று சொல்கிறார்கள். டாக்ஸி கட்டணம்  3000 ரூபாய் கேட்கிறார்கள். பொதுப்போக்குவரது பற்றி விசாரித்தால் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள்!  இது 2015 இன் நிலை  என்றால், 2020 இல் மட்டும் பெரிதாக முன்னேறிவிடவில்லை.  நிலை என்னவென்று கீழ்க்கண்ட படத்தைப்பார்க்கலாம் அதாவது, புது டெல்லி சென்று, அங்கிருந்து ஹூடா சிட்டி சென்டர் - மெட்ரோலில் பயணித்து, அங்கிருந்து 45 கி.மீ தூரம் நாம் டாக்ஸியில் செல்லவேண்டும். கிட்டத்தட்ட ரூபாய் 1200/- ஒரு ஆளுக்கு.  இந்தியாவின் தலை நகரில் இருந்து அண்டை மாநிலத்தின் முக்கியமான தொழில் நகரத்துக

Ayyappanum Koshiyum

Image
We watched the movie Ayyapanum Koshiyum yesterday. Though the movie is about 3 hours long, it is convincingly engaging the audience. We indeed never did any "pause" in between when watching it in Prime Video. People around Koshi are creating new problems and pulling him back whenever Koshi realizes his mistakes and tries to move forward. One open dialogue between A&K itself would have stopped the story to end before "interval". The entire storyline is how ego generates never-ending complications in people’s lives. I am not going to talk about the movie, but about a scene in the movie. The lady constable Jessie is crying at the police station after watching the breaking news on TV. At that time, when Ayyappan Nair says "You are in uniform, stand upright", she replies "After wearing this uniform only, I started to stand upright Sir ". It just reminded me of something. We went to Kannur as a group tour during the last Christmas holi

பயணங்கள் தொடர்கின்றன - 3 : தஞ்சை

Image
இரண்டு நாட்கள் தஞ்சை மாவட்ட பயணம் . ஆ.. ஊ என்று தஞ்சை பெரியகோவிலைப் பற்றி பீலா விடும் யுடியூப் வீடியோக்கள் என்னை எப்போதும் ஈர்த்ததில்லை. சமஸ் எழுதிய 'சாப்பாட்டு புராணம்' புத்தகம்தான் எனக்கு இந்த பயண ஆர்வத்தை  ஏற்படுத்தி இருந்தது. ஒரு Culinary Tour  போவதற்காகவே பலமுறை  திட்டமிட்டும் கூட  போக முடியாமல் தடை பட்டிருந்த இடம் இது.  ஆதலால்   இந்த முறையும், நம்பிக்கை இல்லாமல்தான் பயணச்சீட்டை ரயிலில் முன் பதிவு செய்திருந்தேன். பொதுவாக நாங்கள் எங்கள் பயணத் திட்டங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தையும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவோம். ஆனால் இந்த முறை 2 நாட்கள் முன்பு வரை ஹோட்டல் முன் பதிவு செய்யவில்லை. , போகும் இடம், நேரம்  எதுவென்று எல்லாம் முடிவு செய்யவே இல்லை.  எல்லாமே கடைசி நேர முடிவுகள்தான். ஆனாலும் இந்தப் பயணம் மனம் நிறைவாக இருந்தது. ஒரு முக்கியமான விஷயம்,  தஞ்சை மாவட்ட கோவில்களைப் பார்க்க வேண்டும் என்றால், தங்குவதற்கு சரியான இடம் கும்பகோணம்தான். பல கோவில்கள் 30-40 கிமீ சுற்றளவுக்குள் வந்துவிடும். நாங்கள் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை ஐந்தரை மணிக்கே கும்பகோணம்

செவ்வியல் இசையும் சிக்கன் புரோட்டாவும் ..

போன வாரத்துக்கு முந்தைய வாரம் கிருஷ்ண கான சபாவில் ரவிக்கிரன் கச்சேரி. செவிக்கு உணவு இல்லாத போழ்து தானே வயிற்றுக்கும் ..! கச்சேரிக்கு பின் பார்டர் ரஹமத் கடையில் நல்லெண்ணெயில் பொரித்த நாட்டுக் கோழியுடன் பரோட்டா. போனவாரம் வாணி மஹாலில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரி. அதன் பிறகு இரவு உணவுக்கு வைர மாளிகை. தேங்காய் எண்ணெயில் பொரித்த நாட்டுக்கோழியுடன் பரோட்டா. இன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் தமிழ் கச்சேரி. மகிழ்நனும் என்னுடன் வர வேண்டும் என்று நிற்கிறான். அவனுடைய தமிழார்வத்தையும் கர்நாடக இசை ஆர்வத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!